-mdl.jpg)
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டம் ஒன்றில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து நேபாள் அண்டர் 19 அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நேபாள் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதார்ஷ் சிங் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பிரியன்ஷு மொலியாவும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த் கேப்டன் உதர் சஹாரன் - சச்சின் தாஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்த இணையை பிரிக்க முடியாமல் நேபாள் அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் தாஸ் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.