இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் இணையும் புதுமுகம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதன்பின் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் கூடுதலாக 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, நேற்று தான் கரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், “விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்தாலும், அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம் தான். இதன் காரணமாக அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தை இந்திய அணியில் இணைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் ஏற்கெனவே ரிஷப் பந்த் அணியில் இருக்கும் நிலையில் கூடுதல் விக்கெட் கீப்பராக சஹா அல்லது பரத் ஆகியோரில் யார் சேர்க்கப்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now