Advertisement

உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்!

உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமே பவுலிங் என்று கிடையாது என இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 02, 2024 • 12:03 PM
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்!
உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே உள்ளது - முத்தையா முரளிதரன்! (Image Source: Google)
Advertisement

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 24 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதால் மிகக் குறுகிய காலத்திலேயே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்திருந்தார். அதோடு 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக் அடுத்த ஆண்டே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகினார்.

ஆனால் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 போட்டிகள், டி20 கிரிக்கெட்டில் 8 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து ஒரே அடியாக ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவரை 15 பேர் கொண்ட அணியில் கூட இந்திய அணி சேர்க்காமல் இருந்து வருகிறது. அதோடு ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார். 

Trending


இப்படி இந்தியாவில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் ஒரே பந்துவீச்சாளராக இருக்கும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்து வருவது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக்கிற்கு ஏன் இடம் கிடைக்கவில்லை? என்பது குறித்து அந்த அணியின் முக்கிய நிர்வாகியான முத்தையா முரளிதரன் பதில் அளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உம்ரான் மாலிக்கிடம் நல்ல வேகம் மட்டுமே இருக்கிறது. ஆனால் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவது மட்டுமே பவுலிங் என்று கிடையாது. இன்னும் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. ஸ்லோவர் பால், யார்க்கர் பால், நக்கல் பால், ஸ்லோயர், யார்க்கர் பால் என பந்துவீச்சின் வேரியேஷங்களை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டு பவுலிங் செய்தால் தான் அவரால் சிறப்பான இடத்தை அடைய முடியும்.

சர்வதேச போட்டியில் பந்துவீச ஏகப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதையெல்லாம் கற்றால் மட்டுமே உம்ரான் மாலிக் முழுமையான பந்துவீச்சாளராக மாறுவார். இந்திய அணியில் பும்ரா ஒரு முழுமையான பவுலர். ஏனெனில் அவரால் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச முடியும். அதோடு அந்த வேகத்திலேயே அவரால் துல்லியமாக யார்க்கர் வீச முடியும்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement