
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. இதில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன்(53) மற்றும் விஜய் சங்கர்(63) இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா(45)மற்றும் வெங்கடேஷ் ஐயர்(83) இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். 16 ஓவரில் 155 ரன்கள் அடித்திருந்த கொல்கத்தா அணிக்கு, கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் வெற்றிபெற தேவைப்பட்டது. ரஷித் கான் உள்ளே வந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஆட்டத்தை குஜராத் அணியின் பக்கம் திருப்பினார்.
கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் விளாசி, போட்டியின் கடைசி பந்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கிய ரிங்கு சிங் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷா ருக் கான் உள்ளிட்ட பலரும் பாராட்டி வரும் நிலையில், ரோகித் சர்மாவின் ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.