
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கின்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தொடரின் இறுதி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது அரை சதங்களாலும், விராட் கோலியின் சதத்தாலும் 438 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து மிக மிக பொறுமையாக ஆமை வேகத்தில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 115.4 ஓவர்களில் 2.20 ரன் ரேட்டில் 255 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆமை வேக ஆட்டம் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் மழை பிரச்சனையை கொடுத்தது.