Advertisement

6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்!

குஜராத் அணி வீரர் கரீம் ஜானத் ஓவரில் ரஜாஸ்தன் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தாடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement
6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்!
6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 29, 2025 • 02:07 PM

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியனது இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான சதத்தைன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 29, 2025 • 02:07 PM

இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதத்தையும், 35 பந்துகளில் ஐபிஎல் சதத்தியும் பூர்த்தி செய்து அசத்தினார். இந்த 14 வயது வீரர் தனது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என மொத்தமாக 101 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதேசமயம் இப்போட்டியில் குஜராத் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய கரீம் ஜனத் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

Also Read

அதன்படி இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை கரீம் ஜானத் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயெ சிக்ஸரை விளாசி மிரட்டினார். அத்துடன் நிற்கான சூர்வன்ஷி அடுத்த பந்தையும் பவுண்டரியை அடித்த நிலையில், மூன்றாவது பந்தை மீண்டும் லெக் திசையில் சிக்ஸரை விளாசி பந்துவீச்சாளர் மீது அழுத்தத்தை அதிகரித்தார். 

மேற்கொண்டு ஓவரின் 4ஆவது மற்றும் 5ஆவது பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, கடைசி பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் மீண்டும் ஒரு அபார சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். இதன்மூலம் அந்த ஓவரில் மட்டும் வைபவ் சூர்யவன்ஷி 30 ரன்களை விளாசித்தள்ளினார். இதன் மூலம் ஒரு அணிக்காக அறிமுகமான போட்டியின் முதல் ஓவரிலேயே அதிக ரன்களைக் கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை கரீம் ஜானத் படைத்துள்ளார். 

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய வருண் சக்ரவர்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியின் முதல் ஓவரில் 25 ரன்களைக் கொடுத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது கரீம் ஜானத் முறியடித்துள்ளார். இந்நிலையில், கரீம் ஜானத் ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தாடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. 

6,4,6,4,4,6: கரீம் ஜானத் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி- காணொளி

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement