Advertisement

ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!

நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 03, 2023 • 12:16 PM
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதாக ஐசிசி இரு அணிகளுக்கும் கடுமையான அபராதத்தை விதித்துள்ளது.

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்டுகளில் 4இல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2ஆவது டெஸ்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்து இருக்கிறார்கள். மொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்டையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது.

Trending


இதே போல் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மான்செஸ்டரில் மழையால் டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது. ஐசிசியின் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஒரு புள்ளி கழிக்கப்படும். அத்துடன் ஒரு ஓவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும்.

இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 28 புள்ளிகள் சேர்த்து இருந்தது. அதில் 19 புள்ளிகளை அபராதமாக இழந்து, தற்போது அதன் புள்ளி எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதே போல் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி 28இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

 

ஐசிசியின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'மான்செஸ்டரில் நடந்த 4ஆவது டெஸ்டில் இரு நாட்கள் பெய்த மழை காரணமாக 2ஆவது இன்னிங்சில் எங்களுக்கு பந்து வீச கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஐசிசி பந்துவீச்சில் தாமதம் செய்ததாக கூறி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து 10 புள்ளிகளை எங்களிடம் இருந்து பறித்துள்ளது. இது எப்படி நியாயமானது என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement