
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தின் இருக்கும் ஃபார்மில் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வருண் சக்ரவர்த்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்திருந்தார். இதன் காரணமாகவே இறுதிப்போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.