
வங்கதேசம் - இந்தியா விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்கா மைதானத்தில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மகமதுல்லா மற்றும் மெகதி ஹாசன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மகமதுல்லா 77 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இறுதிவரை போராடிய மெஹிதி ஹாசன் கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக வங்கதேச அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் அடித்திருந்தது. நூறு ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார் மெகதி. சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை மோசமான துவக்கம் அமைந்தது. 65 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வந்தனர்.
அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 82 ரன்கள் ஆட்டம் இழந்தார். அக்சர் பட்டியில் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கட்டை விரலில் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறி இருந்த கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பதாவது விக்கெட்டுக்கு களம் இறங்கி கடைசி வரை இந்திய அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.