
நடப்பு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வஙக்தேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்களை மட்டுமே குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர்கள் குர்பாஸ் 47 ரன்களையும், இப்ராஹீம் மற்றும் அஸ்மதுல்லா 22 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி சார்பாக மெஹதி ஹாசன் மற்றும் நஜ்முல் ஷாண்டோ ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர்.