
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தன் அணிகள் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் உலகக் கோப்பை வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு இன்னிங்ஸை விளையாடி சாதனை படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் நின்ற மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். மேக்ஸ்வெல் விளையாடிய போது தசைப்பிடிப்பால் கடும் வலியால் துடித்தார். எனினும் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடித்தார்.
இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய கிளென் மேக்ஸ்வெல், “நாங்கள் பில்டிங் செய்யும் போது இன்று கடும் வெப்பமாக இருந்தது. இந்த வெயிலில் நான் எந்த உடல் பயிற்சியும் செய்யவில்லை. அதனால் தான் இன்று நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என நினைக்கிறேன். பேட்டிங் செய்யும்போது கடைசிவரை களத்தில் நின்றால், வெற்றி பெற முடியும் என நினைத்தேன். காலை நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் எண்ணினேன்.