
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முதல் முறையாக பிசிசிஐ அறிமுகம் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதுவரை ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு முதல் மகளிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை 2023 - 2027 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் ஊடக உரிமைகளை கைப்பற்றியதற்கு வையாகாம்-18 நிறுவனத்திற்கு வாழத்துக்கள்.