12-mdl.jpg)
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39ஆஆவது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் குர்பாஸ் 81 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் ரன்களை விட்டுக் கொண்டிருந்த பொழுது நூர் மற்றும் லிட்டில் இருவரும் எங்களை ஆட்டத்தில் மீண்டும் கொண்டு வந்தார்கள். குர்பாஸ் நம்பிக்கையுடனும் தெளிவுடனும் பந்துகளை அடித்து விளையாடினார். அப்போது நூர் மற்றும் லிட்டில் இருவரும் பந்து வீசியது கிரேட்.