உலகளவில் அதிக புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. ஐபிஎல் தொடர்களை பார்த்து அனைத்து நாடுகளும் இன்று தங்களது உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர். இன்று ஐபிஎல் தொடரின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டி சென்றுக்கொண்டுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கேலண்டர்களில் ஐபிஎல்-க்கென தனி இடத்தை கேட்டு பெறும் அளவிற்கு பிசிசிஐ உயர்ந்துள்ளது.
இப்படிபட்ட ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 20ஆம் தேதியன்று தான் தொடங்கப்பட்டது. இந்த முறை 16வது சீசன் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கான அட்டவணையை தான் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த 15 ஆண்டு கால சாதனையை கொண்டாட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், Incredible Premier League awards என்ற பெயரில் விருதுகளை வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த கேப்டனாக மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா தேர்வாகியுள்ளார். 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்ததால் தோனியை முந்தி ரோஹித் இந்த பெற்றிருக்கிறார்.