
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. இதில், புஜாரா (90), ரிஷப் பண்ட் (46), ஷ்ரேயாஸ் ஐயர் (86), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) மற்றும் குல்தீப் யாதவ் (40) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹோஷைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாகிர் ஹாசன் 20 ரன்களிலும், யாஷிர் அலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இவர்களைத் தொடர்ந்து வந்த லிட்டன் தாஸ் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்தார். போட்டியின் 13 ஆவது ஓவரை வீசிய சிராஜின் முதல் பந்தில் லிட்டன் தாஸை பார்த்து சிராஜ் ஏதோ பேச, அதற்கு லிட்டஸ் தாஸோ கேக்கல், சத்தமா என்று கேட்டு சிராஜை நோக்கி வந்துள்ளார். அப்போது நடுவர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.