
ஐபிஎல்லின் ஆல்டைம் சிறந்த லெவன் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்கள் ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். இவர்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு இருவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதேபோலத்தான் 3ஆம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
நான்காம் வரிசை வீரராக, எந்த வரிசையிலும் இறங்கி பேட்டிங் ஆடவல்ல ஷேன் வாட்சனையும், 5ஆம் வரிசையில் டி வில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தோனியை தேர்வு செய்து, அவரையே ஐபிஎல் ஆல்டைம் லெவனின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். தோனி சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்தவர்.
ரோஹித்தும் மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தான் என்றாலும், தோனி கேப்டன்சியில் அவருக்கும் சீனியர் என்ற முறையிலும் சிறந்தவர் என்ற முறையிலும் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார் ஹர்பஜன் சிங்.