
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று புனே மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது .
இன்றைய போட்டிக்கான வங்கதேசம் அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் வேக் பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக நசும் அகமத் மற்றும் முகமது ஹசன் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக வந்த லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் இருவரும் பும்ரா மற்றும் சிராஜ் பந்துவீச்சுக்கு மிகவும் கவனத்தைக் கொடுத்து பொறுமையாக விளையாடி 8 ஓவர்களை கடந்தார்கள். அப்போது ஒன்பதாவது ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வந்தார். லிட்டன் தாஸ் நேராக அடித்த பந்து ஒன்றை காலால் தடுக்க முயன்று கீழே விழுந்த அவருக்கு முட்டியில் அடிபட்டது.