Advertisement

ரொனால்டோவுக்கு ஆதரவாக விராட் கோலியின் நெகிழவைக்கும் பதிவு!

இந்த விளையாட்டிலும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த எதையும் யாராலும் பறிக்க முடியாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிறிஸ்டியானோ ரோனால்டோவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan December 12, 2022 • 11:39 AM
Virat Kohli Emotional Post After Cristiano Ronaldo Heartbreak In Fifa World Cup 2022
Virat Kohli Emotional Post After Cristiano Ronaldo Heartbreak In Fifa World Cup 2022 (Image Source: Google)
Advertisement

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ வீரர் யூசெப் என்-நெசிரி அடித்த கோல் காரணமாக போர்ச்சுகல் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் பலருக்கும் போர்ச்சுகல் அணியின் தோல்வி அதிர்ச்சிகரமாக அமைந்தது.

இதனிடையே, தோல்வியால் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் வடித்தார். மைதானத்தில் மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூமிற்கு செல்லும்போது அழுதுகொண்டே சென்றார். இந்தக் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.

Trending


கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமரவைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட 21 வயதான கோன்காலோ ரமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமலேயே போர்ச்சுகல் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அதனால், இன்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை இதே பாணியை சாண்டோஸ் பின்பற்றினார். ஆனால், எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 52ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார் ரொனால்டோ. மாற்று வீரராக களமிறங்கியதும் சக வீரர்களை உற்சாகப்படுத்தத் தொடங்கினார். நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால், அவர் போர்ச்சுகல் ரசிகர்களை நோக்கி தனது கைகளை உயர்த்தி ஆதரவு கோரினார்.

ஒருகட்டத்தில் மொராக்கோ அணியின் வலுவான டிஃபென்ஸை தகர்க்க முயன்ற அவர், 82ஆவது நிமிடத்தில் சக வீரர் ஜோவோ ஃபெலிக்ஸ் உதவியுடன் கோல் அடிக்க முயன்றார். இதுபோல் இருமுறை முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது. இப்படி, மொராக்கோவிற்கு எதிராக போர்ச்சுகல் அணி மீண்டு வருவதற்கு ரொனால்டோ எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய ஆட்ட நேரமும் முடிந்தது. இதனால், போர்ச்சுகல் பரிதாப தோல்வி அடைய மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார் ரொனால்டோ. கண்ணீருடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இந்த விளையாட்டிலும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த எதையும் யாராலும் பறிக்க முடியாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிறிஸ்டியானோ ரோனால்டோவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

இதுகுறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், “இந்த விளையாட்டிலும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த கோப்பையும் அல்லது தலைப்பும் எதையும் பறிக்க முடியாது. மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலர் என்ன உணர்கிறோம் என்பதையும் எந்தத் தலைப்பிலும் விளக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம்.

ஒவ்வொரு முறையும் தனது இதயத்தை வெளிப்படுத்தும் ஒரு மனிதனுக்கு ஒரு உண்மையான ஆசீர்வாதம் மற்றும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சுருக்கம் மற்றும் எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் இது ஒரு உண்மையான உத்வேகம். எனக்கு எல்லா காலத்திலும் நீங்கள் சிறந்தவர்” என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக சர்வதேச கால்பந்தாட்டத்தின் அனைத்து கால கோல் சாதனையாளரான கிறிஸ்டியானோ ரொனால்டா சமீபத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையின் 700ஆவது கிளப் கோல் மற்றும் சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களைப் பதிவுசெய்தார். 118 கோல்களுடன் ஆடவர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ, லீக் போட்டிகளில் கானா அணிக்கு எதிராக கோல் அடித்து ஐந்து உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் இந்த உலகக்கோப்பையில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement