Advertisement

தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்

Bharathi Kannan
By Bharathi Kannan March 29, 2021 • 18:26 PM
Cricket Image for தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை!
Cricket Image for தோனி, அசாருதீன் வரிசையில் கேப்டன் கோலி புதிய சாதனை! (Virat Kohli (Image Source: Google))
Advertisement

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில்
இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி
கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78
ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும்
சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில்
வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

Trending


அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக
போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5
ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர், ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி
தன் வசப்படுத்தியது.


Read More

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement