
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு முதுகெலும்பாக பார்க்கப்படுவர் விராட் கோலி தான். 1000 நாட்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த அவரின் காத்திருப்பு ஆசிய கோப்பையில் முடிவுக்கு வந்தது. மேலும் தொடர்ச்சியாக காட்டிய அதிரடியால் 276 ரன்களை குவித்து, ஆசிய கோப்பையில் அதிக ஸ்கோர் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி, ஓய்வை அறிவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார். அவர் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.