
Virat Kohli Pays A Heartfelt Tribute To 'Skip' MS Dhoni (Image Source: Google)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக விளங்கிய தோனி, தற்போது கேப்டனாக தனது இறுதி முடிவுரையை எழுதிவிட்டார். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தோனி எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் ஏலம் முதல் முறையாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ஆறரை கோடி ரூபாய் கொடுத்து தோனியை ஒப்பந்தம் செய்தது. அதற்கு ஏற்றார் போல் தோனி முதல் சீசனிலேயே இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்து சென்றார்.
அதன் பின்னர், 2010 ஆம் ஆண்டு பலமான சிஎஸ்கே அணியை உருவாக்கிய தோனி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார். பின்னர் அடுத்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிஎஸ்கே அணி, 2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்து சென்றார்.