Advertisement
Advertisement

மும்பை அணி இப்படி தோற்பாங்கனு நினைச்சு பாக்கல - விராட் கோலி 

மும்பை அணி 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை பறிகொடுக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 27, 2021 • 12:12 PM
Virat Kohli Praises Hattrick Hero Harshal Patel After Emphatic Win
Virat Kohli Praises Hattrick Hero Harshal Patel After Emphatic Win (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 14ஆவது சீசன் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, கிளென் மேக்ஸ்வெல் 56 ரன்கள் சேர்த்தார்கள்.

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய மும்பை அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 43 (28), குவின்டன் டி காக் 24 (23) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். அடுத்துக் களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தார்கள். குறிப்பாக, அந்த அணி வெறும் 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து, 18.1 ஓவர்கள் முடிவில் 111/10 ரன்கள் சேர்த்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 

Trending


ஆர்சிபி அணித் தரப்பில் ஹர்ஷல் படேல் சிறப்பாக பந்துவீசி ஹார்திக் பாண்டியா,பொல்லார்ட், ராகுல் சஹார் ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால்தான், மும்பை விரைவாக ஆல்-அவுட் ஆனது.

போட்டி முடிந்தப் பிறகு பேசிய விராட் கோலி“வெற்றிபெற்ற விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இரண்டாவது ஓவரிலேயே படிக்கலை வீழ்த்தி, போட்டியை மும்பை பக்கம் சாய வைத்தார் பும்ரா. நல்லவேளை அடுத்து கே.எஸ்.பரத் சிறப்பாக விளையாடி என்மீது இருந்த அழுத்தத்தைக் குறைத்தார். இதனால், என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. 

மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. நாங்கள் 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தோம். கூடுதலாக 10,15 ரன்களை அடித்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், மும்பை அணி 30 ரன்களுக்கு 8 விக்கெட்களை பறிகொடுக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பந்துவீச்சாளர்களிடம் ஒருகுறையும் இல்லை. பேட்ஸ்மேன்கள் இன்னும் ரன்கள் அடித்திருக்க வேண்டும். டேனியில் கிறிஸ்டியன் அனுபவமிக்க பந்துவீச்சாளர் கடைசி நேரத்தில் சிறப்பாக ஓவர் வீசினார். அதேபோல், சஹலும் மிரட்டலாகப் பந்துவீசினார். ஹர்ஷல் படேல் நம்பமுடியாத வகையில் பந்துவீசி, அணிக்கு விரைவாக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அடுத்துவரும் போட்டிகளிலும் இதேபோன்று சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement