
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இதன்லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வதில் மிகவும் முக்கிய பங்காக இருந்தது விராட் கோலி தான். 2 ஆண்டுகளாக சரிவர விளையாடமல் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்து இன்று வரை சிறப்பாக ஆடி வருகிறார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். அதுவும் 133 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார்.
விராட் கோலியின் இந்த சிறப்பான கம்பேக்கிற்கு தோனியும் முக்கிய காரணம் எனக்கூறலாம். கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, யாருமே தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும், தோனி மட்டுமே தனக்கு ஆறுதல் கூற அழைத்ததாக கூறியிருந்தார். இந்நிலையில் தோனி அன்று என்ன மெசேஜ் அனுப்பினார் என்பதையும் கோலி கூறியுள்ளார்.