
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று நடைபெற்ற 48ஆவது போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற்றது . இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு மிக அருகில் சென்று விட்டது குஜராத் . இன்று நடைபெற இருக்கும் நாற்பத்தி ஒன்பதாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றன . இந்த போட்டி 03; 30 மணி அளவில் துவங்க இருக்கிறது.
இதற்கு அடுத்து டெல்லியில் நடைபெற இருக்கும் 50ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோத இருக்கின்றன . இரண்டு அணிகளுக்குமே இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது . பெங்களூர் அணியை பொறுத்த வரை இந்த வெற்றி அவர்களை முதல் நான்கு இடங்களுக்கு முன்னேற செய்யும் டெல்லி அணியை பொறுத்தவரை அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழக்காமல் தொடரில் இருக்க உதவும் .
இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் . பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது . டெல்லி அணியுடன் கடந்த போட்டியிலும் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .