
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்போது சிறப்பாக செயல்படும் இந்திய அணி, இத்தொடரில் அப்படியே நேர் மாறாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகிறது. இதன் காரணமாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எழத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.