
இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கடந்த 2021 முதல் 2022 சீசனுக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் காயம் அடைந்த வீரர்கள் குறித்தும் அதில் காயமடையாமல் இருந்த ஒரு வீரர் குறித்த சுவாரசிய தகவலையும் தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாகவே பிசிசிஐ ஆண்டுதோறும் இந்திய அணியின் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வீரர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும்.
இப்படி பிசிசிஐ ஒப்பந்தத்துடன் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் எந்த தொடரிலாவது காயம் அடைந்தால் உடனடியாக அணியிலிருந்து வெளியேறி பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமி-யில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காயமடைந்த வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி சான்று இருந்தால் மட்டுமே மீண்டும் அணியில் இணைய முடியும்.
அந்த வகையில் கடந்த சீசனில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் கேஎல் ராகுல், ரஹானே, பும்ரா, ரிஷப் பந்த், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, சூர்யா குமார் யாதவ், ஹர்ஷல் படேல் என பல நட்சத்திர வீரர்களோடு சேர்த்து மொத்தம் 23 பேர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.