Advertisement
Advertisement
Advertisement

கேப்டன்சியைத் துறக்க கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: சோயப் அக்தர் 

கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2022 • 11:37 AM
Virat Kohli was forced to leave captaincy of India, says Shoaib Akhtar
Virat Kohli was forced to leave captaincy of India, says Shoaib Akhtar (Image Source: Google)
Advertisement

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

Trending


அதன்பின் கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். விலகல் குறித்து கோலி, "என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன், நான் பதவியிலிருந்து இறங்க சரியான தருணம்" என்று கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பதவிலிருந்து விராட் கோலி விலக கட்டாயப்படுத்தப்பட்டார் என பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கேப்டன்சியைத் தானாக விட்டுவிலகவில்லை. அவர் அவ்வாறு செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இது அவர் கேப்டன்சியைத் துறப்பதற்கான சரியான நேரமில்லை. அவர் ஒரு சிறந்த மனிதர். சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் அவர் மற்றவர்களைவிட நிறைய சாதித்துள்ளார். 

அவர், அவரது பாணியில் இயல்பாக இன்னும் சில காலம் விளையாட வேண்டும். அவர் எப்போதும் பாட்டம் ஹேண்ட் ஸ்டைலில் விளையாடுவார். என்னைப் பொறுத்தவரை பாட்டம் ஹேண்ட் ப்ளேயர்கள் தான் முதலில் சிக்கலை சந்திப்பார்கள் என நினைக்கிறேன்.

விராட் கோலி எல்லா கசப்புணர்வையும் மறந்துவிட்டு, அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேறிச் சென்று விளையாட வேண்டும். பிசிசிஐ இந்த விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்டும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ மீது மறைமுக விமர்சனம் போல் கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தெரிவித்திருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement