
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிநேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கோல்டன் டக் அவுட்டானார்.
கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரது காம்பினேஷனில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்களும், ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர், கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். குர்பாஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜத்ரன் 50 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தானது லெக் ஸைடு திசையில் வைடாக சென்ற நிலையில் அதனை பிடித்து சஞ்சு சாம்சன் ஸ்டெம்பிங் செய்தார். டிவி ரீப்ளேயில் சரியான முறையில் ஸ்டெம்பிங் செய்தது தெரியவர அவுட் என்று காட்டப்பட்டது. இது ரோகித் சர்மாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று போட்டியின் 16.3ஆவது பந்தை கரீம் ஜனத் எதிர்கொண்டார்.