
இந்திய ரசிகர்களால் ‘கிரிக்கெட் திருவிழா’ என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து தற்போது 17ஆவது சீசனை எதிர்நோக்கிவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. குறிப்பாக இத்தொடர் ஆரம்பிப்பதற்கு 8 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது.
அதன்படி தொடரின் முதல் லீக் போட்டியிலேயே ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காரணம் ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றாக இருந்துவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனிலாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் அந்த அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.