Advertisement

ஐபிஎல் 2023: முரளி விஜய் விளையாடிய இன்னிங்ஸ் குறித்து மனம் திறந்த விரேந்திர சேவாக்!

காடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸுக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கேவின் முரளி விஜய் சதமடித்ததை நினைவு கூர்ந்து விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2023 • 19:01 PM
Virender Sehwag recalls Murali Vijay's carnage against Delhi in IPL 2012 playoffs!
Virender Sehwag recalls Murali Vijay's carnage against Delhi in IPL 2012 playoffs! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது . இதில் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் புள்ளிகள் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன . நேற்று நடைபெற்ற 24ஆவது போட்டியில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் மோதின பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது . சென்னை அணிக்காக கான்வே மிகச் சிறப்பாக ஆடி 83 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூர் அணிக்காக மேக்ஸ்வெல் 76 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் .

இந்தப் போட்டியில் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய கிரிக்கெட் போட்டியின் நேரலையின் போது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கள் விரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர் . அப்போது பேசிய சேவாக் 2012 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் தன்னால் மறக்க முடியாத போட்டி பற்றி கூறினார் .

Trending


2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. புள்ளிகள் பட்டியலிலும் தொடர் முழுவதுமே முதல் இரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தது சேவாக், டேவிட் வார்னர், ஜெயவர்த்தனா, இர்ஃபான் பதான் என நட்சத்திர வீரர்களால் நிரம்பியிருந்த டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது .

மேலும் 2012 ஆம் ஆண்டின் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை குவித்தது அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய முரளி விஜய் 58 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 113 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 

இந்தப் போட்டியில் ஆடிய டெல்லி அணியினர் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவினர் . இதன் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரின் மீண்டும் ஒரு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .

இது குறித்து பேட்டியளித்த சேவாக், “அந்தத் தொடர் முழுவதுமாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தோம் . அதனால் எந்த ஒரு போட்டியிலும் திடீரென மோசமான சேவை சந்தித்து தோல்வி பெறுவோம் என நினைக்கவில்லை . இர்ஃபான் பதானுக்கு அந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ஆப் ஸ்பின்னர் ஒருவரை அணியில் சேர்த்தேன். 

மைக் ஹஸ்ஸி எதிராக சிறப்பாக பந்து வீசலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் முரளி விஜய் அந்த பந்துவீச்சாளரை பயன்படுத்தவே விடவில்லை” என தெரிவித்தார். மேலும் இதுபற்றி கூறிய சேவாக் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை எதிரணியில் இருந்து நான் சந்தித்ததே இல்லை அப்படி ஒரு சூறாவளியான ஆட்டம் என முரளி விஜயின் அந்த சதத்தை புகழ்ந்து பேசி இருந்தார் .


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement