
WAC 2022: Indian Women Team restricted Thailand Women by 37 runs (Image Source: Google)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஹர்மன்ப்ரித் கவுர் தலைமையிலான இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.
இந்நிலையில் தாய்லாந்து மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி இன்று லீக் ஆட்டத்தை விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இதற்முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்மிருதி மந்தனா அந்த பட்டியளில் இடம்பிடித்துள்ளனர்.