Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: ஷமிக்கு கடைசி ஓவரை கொடுத்த காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் கடைசி ஓவரை முகமது ஷமிக்கு கொடுத்த காரணத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

Advertisement
Wanted to give Mohammed Shami a little bit of challenge: Rohit Sharma
Wanted to give Mohammed Shami a little bit of challenge: Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 17, 2022 • 04:33 PM

டி20 உலகக் கோப்பை 2022 பிரதான சுற்று போட்டிகள் வரும் 23ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது. அதற்குமுன் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி தற்போது தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடியது. இப்போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 17, 2022 • 04:33 PM

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது.  அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர்கள் ஆரோன் பிஞ்ச் 76 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும் சேர்த்து அபாரமாக செயல்பட்டனர். அடுத்து ஸ்மித் 11, மேக்ஸ்வெல் 23 , ஸ்டாய்னிஸ் 7, டிம் டேவிட் 5 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

Trending

இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற கடைசி இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷல் படேல் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில், இறுதி ஓவரில் ஷமி 2,2 என முதல் இரண்டு பந்துகளில் ரன்களை விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தில் கம்மின்ஸை கோலி லாங் ஆனில் ஒத்த கையில் கேட்ச் பிடித்த நிலையில் அடுத்து ஆகர் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்துகளில் ஷமி யார்க்கர் வீசி இங்கிலிஸ், ரிச்சர்ட்சன் ஆகியோரை கிளின் போல்ட் ஆக்கினார்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180/10 ரன்களை மட்டும் சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. டெத் ஓவர்களில் ரோஹித் ஷர்மா இதுவரை வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், இம்முறை அஸ்வினையும் 17ஆவது ஓவரில் பந்துவீச வைத்தார். இதுதான் ஆட்டத்தில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. 

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘‘சிறப்பாக பேட்டிங் செய்தோம். 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். கடைசிவரை ஒரு பேட்டர் விளையாட வேண்டும் என நினைத்தோம். சூர்யகுமார் யாதவ் அதனை செய்து காண்பித்தார். பந்துகளை அடித்து ஆடுவதைவிட, கேப்பில் தட்டிவிட்டால் சுலபமாக ரன்களை குவிக்க முடியும். இது சிறந்த பயிற்சி ஆட்டமாக அமைந்தது’’ எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், முகமது ஷமிக்கு கடைசி ஓவரை கொடுக்க முன்கூட்டியே திட்டமிட்டீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித், ‘‘அப்படியெல்லாம் இல்லை. திடீரென்று எடுத்த முடிவுதான். அடுத்த போட்டியில்தான் ஷமியை களமிறக்க முடிவு செய்திருந்தோம். கடைசி ஓவரை ஷமி வீசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இதனால்தான், உடனே ஷமியை அழைத்தேன்’’ எனத் தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement