
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 177 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி ஏமாற்றமளித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
மேலும் நேற்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இருவருக்கும் வழங்கப்பட்ட மூன்றாவது நடுவரது தீர்ப்பு சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்தது. ரபாடா பந்துவீச்சில் ஸ்மித்துக்கு பந்து ஸ்டெம்பில் படுவதற்கான வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவரிடம் சென்ற பொழுது துல்லியமாக பந்து ஸ்டெம்பில் சரியாக பட்டது.