
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி உடன் மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்று இருக்கிறது. இதற்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி உடன் நாளை முதல் போட்டியில் மோதுகிறது.
இந்தப் போட்டிக்கு எப்படியான அணி அமைய வேண்டும்? எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற வேண்டும்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிரடியான தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் இருக்கும் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் நான் கேஎல் ராகுலுக்கு பதிலாக அவரையே விரும்புகிறேன். பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் பேட்ஸ்மேன்கள் மீதுதான் கவனம் செலுத்தப்படும். பந்து வீச்சாளர்கள் மிக நன்றாகவே வங்கதேச தொடரில் செயல்பட்டார்கள் .