
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதாலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் பாரதி ஃபுல்மாலில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஷிகா பாண்டே மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விலையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா - ஜெஸ் ஜோனசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷஃபாலி வர்மா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தா ஜெஸ் ஜோனசன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.