பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி! (Image Source: Google)
சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியானது த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 18ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஷஷாங்க் சிங் முதல் பந்தில் பவுண்டரியையும், இரண்டாவது பந்தில் அபாரமான சிக்ஸரையும் விளாசி அசத்தினார்.
அதன்பின் மூன்றாவது பந்தையும் ஷஷாங்க் சிங் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி தூக்கி அடித்தார். மேலும் அவர் அந்த ஷாட்டை முழையாக விளையாடியதன் காரணமாக நிச்சயம் அது சிக்ஸர் தன் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டெவால்ட் பிரீவில் சிக்ஸருக்கு சென்ற பந்தை தடுத்து நிறுத்தியதுடன், அற்புதமான கேட்ச்சையும் பிடித்திருந்தார்.
மேலும் அவர் இந்தப் பந்தைப் பிடிக்கும்போது, இரண்டு முறை பவுண்டரி எல்லைக்கு வெளியேயும், உள்ளேயும் என மூன்று முயற்சிகளில் கேட்சை பிடித்து அசத்தி இருந்தார். மேற்கொண்டு ஏபி டி வில்லியர்ஸும் இதுபோன்ற கேட்சுகளை எடுப்பதில் நிபுணராக இருந்தார், இந்நிலையில் பேபி ஏபிடி என்றழைக்கபடும் டெவால்ட் பிரீவிஸும் அதே பாணியில் இந்த கேட்ச்சை பிடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இக்கேட்ச் குறித்த காணொளியும் வைரலாகி வருகிறது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Also Read: LIVE Cricket Score பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 54 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தாலும், இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்திருந்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.WHAT. A. CATCH
— IndianPremierLeague (@IPL) April 30, 2025
An absolute stunner from Dewald Brevis at the boundary
Excellent awareness from him
Updates https://t.co/eXWTTv7Xhd #TATAIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/CjZgjdEvUQ
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News