
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து 11 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும், மறுபக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் 4ஆவது தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஒருகட்டத்தில் பெங்களூரு அணி இப்போட்டியை எளியாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை வீசிய இஷான் மலிங்கா ஆட்டத்தை போக்கை தலைகீழாக மாற்றினார். ஏனெனில் அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஆர்சிபி அணி வீரர் ரஜத் படிதார் அடித்த பந்தை அடித்து விட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்த நிலையில் அந்த பந்தை பிடித்த மலிங்கா அவரை ரன் அவுட்டாகி அசத்தினார்.