
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும், மார்கோ ஜான்சன் 23 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் இம்ரான் தாஹீர் மற்றும் ஹர்டுஸ் வில்ஜோன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் அர்டர் வீரர்கள் டெவான் கான்வே 30, ஃபாஃப் டூ பிளெசிஸ் 19, ஜேபி கிங் 9, விஹான் லூப் 13, மொயீன் அலி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடிய நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.