
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் எங் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலனும் 12 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல அடுத்ததாக வந்த கிறிஸ் பௌஸ் 14 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 36/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது. இருப்பினும் அந்த சூழ்நிலையில் டாம் ப்ளண்டலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார்.
அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை வலுப்படுத்திய டாம் பிளண்டல் 68 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 10, மெக்கொன்சி 20, ஜெமிசன் 20 என போன்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 219/8 என நியூசிலாந்து தடுமாறிய போது கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ரன்களை எடுக்கும் நோக்கத்தில் பேட்டிங் செய்த இஷ் சோதி 46ஆவது ஓவரில், ஹசன் மஹ்முத் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார்.