-mdl.jpg)
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி 9 தோல்விகள் என 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எஞ்சிய போட்டிகளுக்காக தயாராகி வருகிறது. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.