
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து லக்னோ மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. இன்றைய நாள் முழுக்க ஆஸ்திரேலியா அணிக்கு சரியாக சென்ற ஒன்று டாஸ் வெற்றி பெற்றது மட்டும்தான்.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 108, எய்டன் மார்க்ரம் 56 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மிட்சல் மார்ஷ் 7 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 13 ரன்களில் உடனுக்குடன் வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக மூன்று பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை தொடங்கினார். இந்தப் போட்டியை வென்றாக வேண்டியது முக்கியம் என்கின்ற காரணத்தினால், அவர் எடுத்ததும் அதிரடியில் ஈடுபட்டார். இந்த நிலையில் ரபடா வீசிய பந்துக்கு எல்பிடபிள்யு கேட்கப்பட்டது. கள நடுவர் அதற்கு அவுட் தரவில்லை.