
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு அதிகபடியான வாய்ப்புகள் இருந்த நிலையிலும், அந்த அணியின் கருண் நாயர் ஆட்டமிழந்த பிறகு அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக சோபிக்க தவறி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடியதுடன் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த அவர் 12 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்திருந்தார். அப்போது இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசிய நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட கருண் நாயர் பந்தை சரியாக கணிக்க தவறியதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் சதமடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 89 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.