Advertisement
Advertisement
Advertisement

கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய  ஸ்ரேயாஸ் ஐயர்!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான கேட்சை பிடித்த பின் ஜடேஜா எப்படி பதக்கம் கொடுங்கள் என்று பயிற்சியாளரை பார்த்து கொண்டாடினாரோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் கொண்டாடியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 22, 2023 • 15:37 PM
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய  ஸ்ரேயாஸ் ஐயர்!
கேட்ச் பிடித்து ஜடேஜாவைப் பொல் கொண்டாடிய  ஸ்ரேயாஸ் ஐயர்! (Image Source: Google)
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது முஷ்ஃபிகுர் ரஹிம் கொடுத்த கேட்சை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா புலி போல் பாய்ந்து பிடித்தார். இதனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்கள் மிரண்டனர். அந்த கேட்சை பிடித்த பின் இந்திய வீரர் ஜடேஜா, உடனடியாக பயிற்சியாளர் திலீபை பார்த்து சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் எனக்கு தான் என்று சைகையில் கூறினார்.

அப்போது பயிற்சியாளர் திலீப் அருகில் இருந்த நடுவர் எராஸ்மஸும் ஜடேஜா பதக்கம் கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார். அதன்பின் ஜடேஜாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து பயிற்சியாளர் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அவருக்கு அளித்தார். இதனிடையே ஜடேஜாவின் கொண்டாட்ட காணொளி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது.

Trending


இந்த நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கான்வே - யங் கூட்டணி தொடக்கம் கொடுக்க, இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன்கள் கூட வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சிராஜ் அட்டாக்கில் வர அந்த ஓவரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 3வது ஓவரில் பும்ரா 5 டாட் பால்களை வீசினார். இதனால் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறியது கண்கூடாக தெரிந்தது. இதனையறிந்த சிராஜ் பும்ராவின் லைன் மற்றும் லெந்திலேயே பந்துவீசினார். இருவரும் ஒரே லைன் மற்றும் லெந்தில் மெஷின் போல் வீசினர்.

திடீரென 4ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற கான்வே, ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதனால் கான்வே டக் அவுட்டாகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயரின் கேட்ச் பார்ப்பதற்கு அபாரமாக இருந்தது. சரியான டைமிங்கில் டைவ் அடித்து கேட்சை பிடித்தார். அதன்பின் உடனடியாக பயிற்சியாளர் திலீபை நோக்கி ஜடேஜாவை போல் பதக்கம் எனக்கே என்று கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதனால் இந்திய அணி வீரர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. இதனை பவுண்டரி லைனில் இருந்து பார்த்து கொண்டிருந்த திலீப் சிரித்து கொண்டே நடந்து சென்றார். இதன் மூலம் சிறந்த ஃபீல்டருக்கான விருந்து இந்திய வீரர்களை கூடுதலாக ஃபீல்டிங்கில் செயல்பட உத்வேகம் அளித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement