
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டா ஸ்வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது கேப்டன் ஷான் மசூத் மற்றும் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக்கின் அபாரமான சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர மிடிவில் 328 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 151 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் சகீல் 35 ரன்களுடனும், நசீம் ஷா ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர்.
இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களையும் கடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நஷீம் ஷா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Tonked for a maximum
— Pakistan Cricket (@TheRealPCB) October 8, 2024
Naseem brings out the big shot! #PAKvENG | #TestAtHome pic.twitter.com/R4EYP8OEBN