
watch-shahid-afridi-praises-taliban-pakistani-media-trolled-veteran (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாகத் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து, தலிபான்கள் ஆஃப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை தங்கள் ஆட்சியில் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.