Advertisement

அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தாவி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2024 • 14:24 PM
அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி!
அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Trending


இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 76 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், ஒல்லி போப் ஆகியோரும் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

 

இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் 76 ரன்களைச் சேர்த்து அதிரடி காட்டிய கிரௌலி அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே அட்டாக் செய்ய நினைத்து இறங்கி வந்து விளையாடினார், அந்த ஓவரின் 3ஆவது பந்தை சரியாக கணிக்க தவறிய கிரௌலி பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்க, அது ஸ்ரேயாஸ் ஐயார் கையில் தஞ்சமடைந்தது. இந்நிலையில் அபாரமாக ஸ்ரேயாஸ் ஐயர் தாவி பிடித்த அந்த கேட்ச்சின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement