
Watch: Shreyas Iyer's Recovery From Injury A "Work In Progress" (Image Source: Google)
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டையில் காயமடைந்து, அந்த தொடரிலிருந்து விலகியதுடன், ஐபிஎல்லிலும் ஆடவில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆடாததால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் வழிநடத்தினார். இதற்கிடையே தோள்பட்டையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், 3-4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், அவர் தோள்பட்டைக்கு கஷ்டம் கொடுக்கும் வகையில் பயிற்சி செய்யக்கூடாது என்றாலும், இலங்கை தொடரில் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் சிறு சிறு பயிற்சிகளை தொடங்கிவிட்டார்.