Advertisement

ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!

ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 08, 2025 • 11:20 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இதில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 08, 2025 • 11:20 AM

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆயூஷ் மத்ரே இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஆகாஷ் ஆனந்த் 10 ரன்களுக்கும், சித்தேஷ் லாட் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆஜிங்கியா ரஹானே ஒருபக்கம் நிதானம் காட்ட, மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9, ஷிவம் தூபே 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Trending

இதையடுத்து அஜிங்கியா ரஹானேவுடன் இணைந்துள்ள ஷம்ஸ் முலானி விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றார். இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் சுமித் குமார் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். சமீப காலங்களில் சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. 

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் குறிப்பாக இத்தொடரில் அவர் இரண்டு முறை டக் அவுட்டாகினார். இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணியின் அதிரடி வீரராக அறியப்படும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலங்களில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உள்ளூர் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் ரன்களைச் சேர்க்க தடுமாறுவது தற்போது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement