Advertisement
Advertisement
Advertisement

எங்கள் வெற்றியை மழை பறித்துவிட்டது - ஜோ ரூட்

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

Advertisement
We Could Have Been One-Nil Up, But Unfortunately, The Weather Has Won: Joe Root
We Could Have Been One-Nil Up, But Unfortunately, The Weather Has Won: Joe Root (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 09, 2021 • 11:35 AM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 09, 2021 • 11:35 AM

இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே தேவை பட்டது. மேலும் இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகளும் இருந்தன. இதனால் இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிட்டது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

Trending

இந்நிலையில், இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ள ரசிகர்கள் மத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இதுகுறித்து பேசிய ரூட்,“என் கண்ணோட்டத்தில், இப்போட்டியில் நாங்கள் 40 ஓவர்களையாவது பெறுவோம் என தோன்றியது. அப்படி இருந்திருந்தாலும் எங்களால் நிச்சயம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வீழ்த்தியிருக்க முடியும் என நினைத்தோம். 

அதற்காக இந்திய அணியை நாங்கள் குறைத்து கூறவில்லை. ஆனால் எங்களது கண்டிஷனில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் என் நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement