
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவாமல் 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது. அதேசமாயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இரண்டாவது தோல்வியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “நாங்கள் விக்கெட்டைப் பார்த்த விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன், இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பேட்டர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்தாக நான் நினைக்கவில்லை, ஒவ்வொரு பேட்டர்களும் நல்ல மனநிலையில் இருந்தனர், சரியான நோக்கத்தைக் காட்டினர்.